சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆபரணதங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இன்று காலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கத்தின் விலை இன்று மாலையில் தடாலடியாக உயர்ந்திருக்கிறது.
விலை உயர்வு
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் தங்கத்தின் விலை தற்போது மீண்டுமாக உயர்ந்துள்ளது. நேற்றைய விலையை விட இன்று காலை அதிகமாக விற்கப்பட்டு வந்த தங்கத்தின் விலை இன்று மாலையில் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. தற்போது வெளிவந்திருக்கும் மாலை நேர நிலவரப்படி ஆபரணதங்கத்தின் விலை சற்றே அதிகரித்துள்ளது.
தனது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சிம்பு – மாநாடு டீஸர் அப்டேட்!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னையில் 22 காரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 160 அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ 37,104 க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 7 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ 4,638 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மட்டுமல்லாது வெள்ளியின் விலையும் ஏற்றத்தை கண்டிருக்கிறது. காலையில் ஒரு கிராம் வெள்ளி ரூ73.40 க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் மாலை நேரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ 74.50 க்கு விற்பனையாகிறது.