பொள்ளாச்சி சம்பவம் மோடிக்கு தெரியாதா?? வறுத்தெடுக்கும் ஸ்டாலின், கனிமொழி!!

0

தமிழகத்திற்கு தேர்தல் பணிகளுக்காக நேற்று பிரதமர் மோடி வந்தார். அப்போது அவர் திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று கூறினார். தற்போது இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி பதிலடி கொடுத்துள்ளனர்.

ஸ்டாலின்

தமிழகத்தில் அடுத்த வாரம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் நேற்று நமது நாட்டின் பிரதமர் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்திருந்தார். இங்கு வந்த அவரை தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வரவேற்றனர். மேலும் நேற்று திருச்சியில் உள்ள தாராபுரத்தில் நடத்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். ஏற்கனவே தமிழகத்தில் ஆ.ராசாவின் சர்ச்சைக்குறித்த கருத்து தொடர்ந்து விமர்சனம் செய்யப்பட்டு வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அதிமுக தலைவர் ஏற்கனவே திமுகவை குறித்து அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று தெரிவித்தார். அதேபோல் நேற்று தாராபுரத்தில் பேசிய மோடியும் இதே போல் தான் பேசி திமுகவினருக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவின் ஸ்டாலின் மற்றும் கனிமொழி மோடியை கடுமையாக சாட்டியுள்ளனர். இதுகுறித்து ஸ்டாலின் கூறியதாவது, பொள்ளாச்சி சம்பவம் தெரியாமல் தான் மோடி பேசுகிறாரா? என்று விமர்சித்தார்.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

மேலும் இதுகுறித்து பேசிய திமுகவின் கனிமொழி கூறியதாவது, பொள்ளாச்சி சம்பவத்தில் நியாயம் கிடைத்ததா என்று மோடி முதல்வரிடம் கேட்டாரா? அல்லது பெண்கள் குறித்து ஹெச்.ராஜா கூறியது பற்றி கேட்பதற்கு மோடிக்கு தைரியம் இருக்கிறதா? திமுகவினருக்கு மனசாட்சி இருப்பதால் தான் ஆ.ராசா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் என்று மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால் பொள்ளாச்சி சம்பவம் நடைபெறும் போது அமைதியாக இருந்த எதிர்க்கட்சியினர் தற்போது விமர்சனத்திற்காக மட்டுமே பொள்ளாச்சி சம்பவம் குறித்து பேசுகின்றனர் என்கிறார்கள் விமர்சகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here