T20 தொடருக்கான இந்திய அணி…, சீனியர் வீரர்களை கழட்டி விட திட்டமா??

0
T20 தொடருக்கான இந்திய அணி..., சீனியர் வீரர்களை கழட்டி விட திட்டமா??
T20 தொடருக்கான இந்திய அணி..., சீனியர் வீரர்களை கழட்டி விட திட்டமா??

இந்திய அணி புது வருடத்தின் தொடக்கத்தில் இருந்தே முழு நீள திட்டத்தை வைத்துள்ளது. இதன்படி, ஜனவரி மாதத்திலேயே, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்தியாவுக்கு வர உள்ளன. இங்கு, இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து, ஒருநாள் தொடரிலும் விளையாட திட்டமிட்டுள்ளது. இந்த தொடர்கள் முறையை, ஜனவரி 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் டி20 தொடரும், ஜனவரி 10, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒருநாள் தொடரிலும் விளையாட இருக்கிறது. இலங்கைக்கு எதிரான இந்த தொடருக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பிசிசிஐயானது, இந்திய அணியை அறிவிக்காமல் உள்ளது.

தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: வெள்ளி பதக்கத்தை வென்ற தமிழக வீராங்கனை!!

சேத்தன் சர்மா குழுவை இந்த தொடருக்கான இந்திய அணியை நாளை அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடருக்கு காயத்தினால் ஓய்வில் இருக்கும் ரோஹித் சர்மா மீண்டு வருவாரா என்பது கேள்வி குறியாகி உள்ளது. இதனால், ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், டி20 தொடருக்கு இளம் வீரர்களை அதிகம் அணியில் இடம் பிடிக்கக் கூடும். இவர்களில், சூர்யகுமார், சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், தீபக் ஹூடா, இஷான் கிஷன், ருத்துராஜ் கெய்க்வாட், தீபக் சாஹல் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில், சீனியர் வீரர்களே ஒருநாள் போட்டிகளில் தேர்வு குழு தேர்வு செய்ய கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here