நாம் வாழ்க்கையில் வெற்றி அடைய எந்த செயலுக்கு எந்த எந்த கடவுளை வழிபட வேண்டும் என பாப்போம் வாங்க.
வழிபாடுகள்
நாம் வாழ்க்கையில் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதே தெரியாத புதிராக உள்ளது. எதற்காக ஓடி கொண்டிருக்கிறோம்?? எதை தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதே புரியாமல் உள்ளோம். கஷ்டம் என்ற ஒன்று வரும்போது தான் கடவுள் இருப்பது நமக்கு நியாபகத்திற்கு வருகிறது.
ஆனால் துன்பம் வரும்போது மட்டுமே கடவுளை நினைப்பது பெரிய பாவம் என சாஸ்திரம் சொல்கிறது. எனவே தான் துன்பம் என்றாலும் சரி இன்பம் என்றாலும் சரி கடவுளுக்கு நன்றி செலுத்துவது முக்கியம்.
சிலர் என்ன தான் கடவுளை கும்பிட்டாலும் நல்லது நடப்பது இல்லை என்று நொந்துகொள்வதுண்டு. ஆனால் இது தவறு. அவரை முழுமையாக நம்பி கும்பிட வேண்டும். அரைமனத்துடன் நடக்குமா?/ நடக்காதா??? என்று வேண்டுதல் கூடாது. இப்பொழுது எந்த எந்த செயலுக்கு எந்த கடவுளை கும்பிட்டால் வெற்றி கிடைக்கும் என்று பார்க்கலாம்.
பணம் விஷயமாக அதாவது பணம் கொடுக்கவோ அல்லது வாங்கவோ செல்லும்போது மஹாலக்ஷ்மியை வழிபட்டு செல்வதால் வெற்றி கிடைக்கும். நாம் முதன்முதலில் செய்யும் எந்த காரியத்திற்கு விநாயகரை வழிபடுதல் வெற்றியை தரும். வெளிநாடு பயணம் மேற்கொள்பவர்கள் ஈசனின் உருவப்படத்தை வாங்கிக்கொண்டு சென்றால் எந்த தடங்கலும் ஏற்படாது. மேலும் தலையில் பிறைசூடிய சந்திரன் இருக்கும் புகைப்படத்தை வாங்குவது மிக சிறப்பு.
ஜாதகம் பார்க்க, வரன் பார்க்க, ஜோதிடம் பயில, திருமணத்தை பற்றி பேச விநாயகரை வழிபட வேண்டும். காதல் கைகூட, பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துகொள்ள முருகனை 10 வாரங்கள் வணங்கி வர வேண்டும். மேலும் தொடர்ந்து 12 வார திங்களில் சிவனை வழிபட்டு வந்தால் காதல் கைகூடும்.
God is truth so everyone will try for another, thanks