சில தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி அவசரம் ஆக இந்தியா திரும்பினார் சுரேஷ் ரெய்னா. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் ரெய்னா முதல் முறையாக மவுனத்தை களைத்து உண்மை காரணத்தை பதிவிட்டு உள்ளார்.
ரெய்னா பதிவு:
சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் “என் குடும்பத்திற்கு நடந்தது மிக கொடூரமானது. என் மாமா படுகொலை செய்யப்பட்டார், என் புவா (அப்பாவின் சகோதரி) மற்றும் உறவினர்கள் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, என் உறவினரும் நேற்றிரவு காலமானார்” என தெரிவித்து உள்ளார். மேலும் இந்த தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து அவரது குடும்பத்தினருக்கு இன்னும் தெரியவில்லை என்று கூறினார். இது குறித்து பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் விரைவான விசாரணைக்கு உத்தரவிடுமாறு அவர் கோரியுள்ளார்.
மேலும் தனது பதிவில் “இன்றுவரை, அந்த இரவு சரியாக என்ன நடந்தது, யார் இதைச் செய்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. இந்த விஷயத்தை விசாரிக்குமாறு பஞ்சாப் போலீசை நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு இந்த கொடூரமான செயலை யார் செய்தார்கள் என்பதை கண்டறிய வேண்டும்” என கூறியுள்ளார்.
What happened to my family is Punjab was beyond horrible. My uncle was slaughtered to death, my bua & both my cousins had sever injuries. Unfortunately my cousin also passed away last night after battling for life for days. My bua is still very very critical & is on life support.
— Suresh Raina?? (@ImRaina) September 1, 2020
ஐபிஎல் 2020 ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாய் ஆகிய மூன்று இடங்களில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் “சென்னை அணிக்காக விளையாட சென்ற சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பியுள்ளார், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் இவர் பங்கேற்க மாட்டார். இந்த நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சுரேஷ் ரெய்னா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முழுமையான ஆதரவை வழங்கும்” என சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் முன்னர் தெரிவித்து இருந்தார்.