சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே உள்ளது. இதனால் பயணிகளின் நலன் கருதி மெட்ரோ நிர்வாகமும் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இப்போது மெட்ரோவில் பயணம் செய்யும் பெண்களுக்காக சூப்பர் திட்டம் ஒன்றை தொடங்க உள்ளனர். அதாவது மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக பெண் பாதுகாவலர்கள் அடங்கிய பிங்க் ஸ்குவாட் என்ற புதிய திட்டத்தை நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அரசு ஊழியர்களே…, அறிமுகமாகும் 8 வது ஊதிய பரிந்துரைக் குழு?? மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
இந்நிலையில் இந்த திட்டத்தை மெட்ரோ நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சித்திக் சென்னை நந்தவனத்தில் உள்ள மெட்ரோ தலைமையகத்தில் தொடங்கி வைத்தார். இந்த பிங்க் ஸ்குவாட் குழுவில் தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்ற 23 பேர் அடங்கிய குழு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் பெண்களுக்கு மெட்ரோ ரயில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் 1860 425 1515 என்ற எண்ணுக்கு உடனே தொடர்பு கொண்டால் அவர்கள் தேவையான நடவடிக்கைகளை செய்து கொடுப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.