கடந்த 2013 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 7 வது ஊதிய பரிந்துரைக் குழுவின் மூலம், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை என அகவிலைப்படியை உயர்த்தி வழங்குகிறது. மேலும், அரசு ஊழியர்களின் சம்பள கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அதன் பரிந்துரைகளை வழங்குகிறது.
ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறையும் பரிந்துரைக் குழுவை மாற்றி அமைப்பது வழக்கம். இதன்படி, 2023 ஆம் ஆண்டு 8 வது ஊதிய பரிந்துரைக் குழு உருவாக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், மத்திய அரசு 8வது ஊதியக் குழுவை அமைப்பது தொடர்பான திட்டம் எதுவும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை என்று தெரிவித்துள்ளது.