நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளும் வேளாண்மை பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம், கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மூன்றாவது நாளாக தொடரும் இந்த போராட்டத்தை கலைக்க போலீசார்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இதனால் போலீஸார்கள் திக்ரி மற்றும் சிங்கு எல்லைகளில் தடுப்பான்கள் சுருள் கம்பிகள் மற்றும் கான்கிரீட் தடுப்புகளை வைத்துள்ளனர். இதன் காரணமாக இந்த பகுதிகளில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் “டெல்லி சாலோ” போராட்டத்தின் கீழ் தேசிய தலைநகருக்குள் நுழைவதை தடுக்க போலீசர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் இதற்காக 30,000க்கும் மேற்பட்ட கண்ணீர் புகை குண்டுகளை ஆர்டர் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.