தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராகவும், சூப்பர் ஸ்டாராகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். தற்போது இவர் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஊ சொல்றியா மாமா என்ற பாடல் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. இதற்கு நடிகை சமந்தா போட்ட குத்தாட்டமும் ஒரு காரணம்.
ஒரே ஆட்டோவில் 15 பள்ளி மாணவர்கள்., பெற்றோர்களுக்கு எச்சரிக்கை., போக்குவரத்து துறை நடவடிக்கை!!
அந்த வகையில், இந்த பாடல் சமந்தாவை பிரபலமாக்கிய நிலையில் அவர் ‘புஷ்பா 2’ படத்திலும் குத்தாட்டம் போடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மயோசிடிஸ் நோய்க்காக சிகிச்சையை மேற்கொண்டு வரும் சமந்தா இந்த படத்தில் ஆட மாட்டார் என்றும் அவருக்குப் பதிலாக திஷா பதானி என்பவரை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேச பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.