ஒரே ஆட்டோவில் 15 பள்ளி மாணவர்கள்.,  பெற்றோர்களுக்கு எச்சரிக்கை.,  போக்குவரத்து துறை நடவடிக்கை!!

0
ஒரே ஆட்டோவில் 15 பள்ளி மாணவர்கள்.,  பெற்றோர்களுக்கு எச்சரிக்கை.,  போக்குவரத்து துறை நடவடிக்கை!!
பொதுவாக வாகன ஓட்டிகள் சாலை விதிகளை பின்பற்றும் படி சாலை போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் சாலை விதிகளை மீறுவோருக்கு காவல் துறையால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை பூந்தமல்லி சாலையில் போக்குவரத்து காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அதில் சட்டத்தை மீறி  15  பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த 2 ஆட்டோகளுக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு போன் செய்து கண்டித்துள்ளனர். இதோடு ஒரே ஆட்டோவில் 15 மாணவர்களை ஏற்றி வருவது அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை கூறி பெற்றோர்களை எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here