எஸ்.பி.பி.,க்கு செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை – மகன் எஸ்.பி.சரண் தகவல்!!

0
SPB and his son
SPB and his son

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து அவரது மகன் சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் வெண்டிலேட்டர் கருவி சிகிச்சையில் இருந்து நீக்கப்பட்டதாக வெளியான செய்தி பொய் என அவர் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி உடல்நிலை:

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சென்னையில் உள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆரம்ப காலத்தில் சீராக இருந்த உடல்நிலை கடந்த 14ம் தேதி முதல் மோசமாக தொடங்கியது. இதனால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

spb
spb

அவருக்கு சர்வதேச மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவுவதால், மகன் எஸ்.பி சரண் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், அப்பாவின் உடல்நிலை நேற்று போல் தான் உள்ளது என அவர் கூறியுள்ளார்.

நடிகை மீரா மிதுன் மீது புகார் – புதுவை போலீசார் வழக்குப்பதிவு!!

View this post on Instagram

#spb health update 18/8/2020

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on

மேலும் செயற்கை சுவாசத்திற்கான வெண்டிலேட்டர் கருவி நீக்கப்பட்டதாக வெளியான செய்தி பொய்யானது. அவர் விரைவில் வெண்டிலேட்டர் இல்லாமல் சுவாசிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அனைவரும் பிராத்தியுங்கள், மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அன்பு, அக்கறை பிராத்தனைகளுக்கு குடும்பமாக நாங்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here