கொரோனா ஊரடங்கள் சினிமா நடிகை,நடிகர்கள் பலரும் வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் பட நடிகைகள் சிலர் விபச்சாரத்தில் ஈடுபட்டு அவர்களை போலீசாரை தற்போது கைது செய்துள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் சினிமா,சின்ன திரை படப்பிடிப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா, சின்னத்திரை நடிகர், நடிகைகள் வாய்ப்பில்லாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் வறுமையை ஒரு சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சில நடிகைகளை விபச்சார வழக்கில் ஈடுபட வைத்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் தமிழ்பட நடிகைகளை விபச்சார வழக்கில் ஈடுபட வைத்துள்ளனர். இதுகுறித்து ஒரு சில நடிகைகள் விபச்சாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.பின்பு போலீசார் விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் இருந்து 2 பெண்களை மீட்டுள்ளனர். பின்னர் அந்த இரண்டு பெண்களும் தமிழ் திரைப்பட மற்றும் தென்னிந்திய நடிகைகள் என்பது தெரியவந்துள்ளது.
விசாரணையில் எந்த பட வாய்ப்புகளும் எங்களுக்கு கிடைக்கவில்லை எனவே என்ன செய்வதென தெரியாமல் தான் இதை செய்தோம் என கூறியுள்ளனர்.தற்போது 2 பெண்களை விபச்சாரத்தில் ஈடுபட வைத்த 2 தரகர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த 2 நடிகைகளின் பெயர்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!