பிக்பாஸ் பிரபலம் கொலை வழக்கு.. மூன்று வருடம் முன்னரே பாலியல் பலாத்காரம் – உறவினர் திடுக் தகவல்!

0
பிக்பாஸ் பிரபலம் கொலை வழக்கு.. மூன்று வருடம் முன்னரே பாலியல் பலாத்காரம் - உறவினர் திடுக் தகவல்!

கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி ஹிந்தி பிக் பாஸ் போட்டியாளரும் பிரபல நடிகையுமான சோனாலி போகாட்டை இறந்துள்ளார். தற்போது இவர் இறப்பில் பல மர்ம முடிச்சுகள் அவிழ்ந்துள்ளன.

நடிகை சோனாலி போகாட்டை:

பிரபல இயக்குனர் மனிஷா மதன் இயக்கிய மதர் ஹூட் என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் தடத்தை பதித்தவர் தான் சோனாலி போகாட்டை. இந்த படத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் இவருக்கு உருவாகினர். இதனை தொடர்ந்து ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். சமீபத்தில் கோவாவிற்கு இவர் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி இறந்துள்ளார்.

ஆனால் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டார்கள் என்று அவரின் குடும்பத்தார் சந்தேகம் தெரிவித்தனர். இதனால் இந்த வழக்கு புதிய கோணத்திற்கு திசை மாறியது. மேலும் நடிகை சோனாலி போகாட்டை உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது அவரின் உடம்பில் காயங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்து, சோனாலியின் உதவியாளர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அடுத்து சீரியலில் கமிட்டான ‘செம்பருத்தி’ புகழ் ஷபானா – வெளியான மாஸ் லுக் புகைப்படம்!!

இது குறித்து நடிகை சோனாலியின் தம்பி கூறியபோது, ‘என் அக்காவின் பி.ஏ. சுதிர் சங்வான், அவரின் உதவியாளர் சுக்விந்தர் தான் இந்த கொலைக்கு காரணம். ஏனென்றால் அவர்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் தனது அக்காவை பாலியல் செய்து வீடியோ எடுத்து கொண்டு மிரட்டியுள்ளனர். வீடியோ அவனிடம் இருப்பதால் நாங்கள் பொறுமையை கடைபிடித்தோம். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு எங்களது வீட்டில் நகை திருட்டு போனதுக்கு இவர்கள் தான் காரணம்’ என்று குற்றம் சாட்டினார்.

மேலும் என் அக்கா இறப்பதற்கு முன்பு தொலைபேசியில் என்னை அழைத்து கூறுகையில் சுதிர் சங்வான் எதையும் செய்வான் என்று கூறும் பொழுது லைன் கட் ஆகி விட்டது என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு இவர் தெரிவித்த உச்சகட்ட பரபரப்பை சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here