பயனர்களுக்கு செக் வைத்த வாட்ஸ்அப் – இனி இதற்கு வழியே இல்லை., ஷாக்கிங் அப்டேட்!!

0
பயனர்களுக்கு செக் வைத்த வாட்ஸ்அப் - இனி இதற்கு வழியே இல்லை., ஷாக்கிங் அப்டேட்!!

உலகெங்கிலும் உள்ள பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் தளத்தில், முத்தான மூன்று முக்கிய அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

மூன்று அப்டேட்:

உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதள ஆப்களில் ஒன்று வாட்ஸ்அப். இந்த செயலி வாயிலாக, உலகின் எந்த மூலையில் உள்ள ஒரு நபருக்கும் நம்மால் கோப்புகளையும்,  பதிவுகளையும் அனுப்ப முடியும். கடந்த சில தினங்களாக இந்த வாட்ஸ் அப் நிறுவனம், தங்கள் பயனர்களுக்கு பல புதுவித அப்டேட்களை நாள்தோறும் அளித்து வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில் தற்போது முத்தான மூன்று, அப்டேட்டுகளை அறிவித்துள்ளது. அதன்படி ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை தடுத்தல், ஸ்டேட்டஸ் வைப்பதை மறைத்தல் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களை விட்டு எந்த  அறிவிப்பும் இல்லாமல் வெளியேறுதல் உள்ளிட்ட மூன்று அப்டேட்களை கொடுத்துள்ளது. இவை அனைத்தும் விரைவில் களமிறங்கும்  என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், இதன் பயனர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here