பிரபல சின்னத்திரை நடிகையான ஷபானா செமபருத்தி சீரியலுக்கு பிறகு அடுத்து நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில் தற்போது அப்டேட் வெளியாகியுள்ளது.
ஷபானா
செமபருத்தி சீரியல் ஆரம்பித்த சில காலமாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது. அதிலும் ஷபானாவிற்கு தான் எக்கச்சக்கமான புகழ் கிட்டியது என்றே சொல்லலாம். சிறந்த கதாநாயகிக்கான விருதையும் தட்டி சென்றிருந்தார் ஷபானா. அவரது பெரிய ஐயா என்ற ஸ்லாங் தான் பட்டிதொட்டி எல்லாம் பரவ ஆரம்பித்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த சீரியல் 1400 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்தது. இந்த சீரியல் நிறைவு விழா கூட அண்மையில் நடைபெற்றிருந்தது. அதனால் பல சர்ச்சைகளும் எழுந்திருந்தது. இப்படி இருக்க இப்பொழுது ஷபானா அடுத்த சீரியலில் களமிறங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஜமீனா என்ற புத்தம்புது சீரியல் வரவுள்ளதாகவும் முகத்தை மறைத்து கொண்டு ஒரு பெண் நிற்பது போலவும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அது கண்டிப்பாக ஷபானா தான் என்று ரசிகர்கள் கெஸ் செய்து விட்டனர். மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.