நடிகர் சிவகார்த்திக்கேயன் மகள் ஆராதனா கனா திரைப்படத்தில் ‘வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடலை தன் மழலை குரலில் பாடி அசத்தியிருப்பார். தற்போது வெளியான ஆராதனாவின் புகைப்படத்தில், குழந்தையாக இருந்த ஆராதனா இப்போ எப்படி வளந்துருக்காங்கன்னு பாருங்க.
பேபி ஆராதனா
சிவகார்த்திக்கேயன் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர். தனது கடினமான உழைப்பாலும், விடா முயற்சியாலும் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான இடத்தை பெற்றுள்ளார். டிவி தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்த இவர் தற்போது பல ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சினிமாவில் நடிகராக அறிமுகமான சிவகார்த்திக்கேயன், தற்போது ஒரு பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளரும் கூட. அனிருத், இமான் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் கிட்டத்தட்ட பத்து பாடல்களை பாடியும், ஐந்து பாடல்களை எழுதியும் உள்ளார் சிவகார்த்திக்கேயன். இவரது வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் பல விருதுகள் இவரை தேடி வந்தது.
டேஸ்டியான ‘தாவா பன்னீர்’ ரெசிபி – வீட்டில செஞ்சு அசத்துங்க!!
சமீபத்தில் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் கலைமாமணி விருதும் இவருக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அப்பாவை போல் பிள்ளை என்று சொல்லக்கூடிய அளவுக்கு சிவகார்த்திக்கேயனின் மகள் ஆராதனாவும் சினிமாவில் கலக்கி வருகிறார். ‘கனா’ என்ற திரைப்படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை பாடியுள்ள ஆராதனாவுக்கு பல பாராட்டுகளும் விருதுகளும் கிடைத்தது.
இந்த பாடலை பாடிய போது குட்டிப்பெண்ணாக இருந்த ஆராதனா தற்போது நன்றாக வளர்ந்திருக்கிறார். சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துள்ள ஆராதனா பெரிய பெண்ணாக வளர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.