விஜய் டிவி ஜாக்குலினுக்கு இப்படி ஒரு குடும்பமா?? வைரலாகும் புகைப்படம்!!

0

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வரும் ஜாக்குலின் மிகவும் சிறப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார் என்று நமக்கு தெரியும். தற்போது அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொகுப்பாளினி ஜாக்குலின்

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்து தற்போது நாயகியாக உருவெடுத்திருப்பவர் தான் ஜாக்குலின்.  அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் பெரிதும் வரவேற்கப்பட்ட நிகழ்ச்சியான “கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியினை நடிகர் ரக்சனுடன் தொகுத்து வழங்கினார்.

சேத்து வைங்கப்பா!! தண்ணி ரொம்ப முக்கியம்!! இன்று உலக தண்ணீர் தினம்!!

இவர் தனது சென்னை பாஷையின் காரணமாக பெரிதும் பேசப்பட்டவர். இவரை மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த காரணம், யார் தன்னை கேலி செய்தாலும் அதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் ஸ்போர்ட்டிவ் நபராக இருப்பது தான். இவர் தொடர்ச்சியாக “கலக்கப்போவது யாரு’ சீசன் 5,6 மற்றும் 7 ஆகியவற்றை தொகுத்து வழங்கினார்.

இப்படியாக இருக்க இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சில நாடகங்களிலும் நடித்தார். முதன் முதலாக ‘ஆண்டாள் அழகர்’ என்ற சீரியலில் நடித்தார். அதில் நடித்து நன்றாக வரவேற்பு கிடைத்ததால் இவர் தொடர்ந்து சீரியல்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார். தற்போது இவர் “தேன்மொழி பிஏ” என்ற சீரியலில் நடித்து வருகிறார். இது மட்டுமின்றி இவர் “லேடி சூப்பர்ஸ்டார்” நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்துள்ளார்.

தொகுப்பாளினி ஜாக்குலினை பொறுத்தவரை இவர் சினிமா பின்னணியை சேர்ந்தவர் அல்ல. மிகவும் எளிமையான குடுமபத்தில் இருந்து பிறந்தவர். இவரது தந்தை அவரது சிறு வயதிலேயே மறைந்து விட்டாராம். இவரது தாயார் தான் ஒன்றை ஆளாக இருந்து ஜாக்குலின் மற்றும் அவரது சகோதரரை வளர்த்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க ஜாக்குலின் தற்போது “முரட்டு சிங்கிள்” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இவருக்கு ஒருவர் ஜாக்குலின் அவரது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றினை அன்பளிப்பாக அளித்துள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here