சிறகடிக்க ஆசை சீரியல் இப்பொழுது முத்துவிற்கு மீனா கார் வாங்கி கொடுத்ததை அடுத்து ரோஹினிக்கு பல பிரச்சனைகள் குவிந்து விட்டது. அதாவது, விஜயா ரோகினியிடம் இன்னும் பணத்தை கேட்டு டார்ச்சர் செய்கிறார். ஏற்கனவே பார்லருக்கு பெயர் மாற்றியதால் விஜயா கடுங்கோவத்தில் இருக்கிறார்.
மேலும் இது வேறு பிரச்சனையாக மாற என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளார். எப்படியும் ரோகினி சிக்கி கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில், இதற்கு மேல் பணம் புரட்டுவது என்பது ரோகினியால் முடியாத காரியம். ஏற்கனவே அளவுக்கு மீறி கடனை வாங்கி விட்டு வட்டி கட்ட முடியாமல் திணறி கொண்டிருக்கிறார்.
IPL 2024: முதல் வெற்றி யாருக்கு?? சென்னை vs பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை!!
இப்படி இருக்க இப்பொழுது முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, சிங்கப்பூர் மாமா என்று அழைத்து வந்தவர் முத்துவிடம் வசமாக சிக்கி கொள்வாராம். இதனால் ரோகினியின் மொத்த பிராடு தனமும் வெளியே வர அதிக வாய்ப்புள்ளதாம்.