தமிழகத்தில் மாநில பள்ளி கல்வித்திட்டத்தில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு நடைபெற்று வந்த நிலையில், இன்று (மார்ச் 22) கடைசி தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற கணித தேர்வில் வினாத்தாள் மிகவும் எளிதாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் ஏழு மதிப்பெண்ணுக்கு பிழை இருப்பதாக, தற்போது ஆசிரியர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அதாவது “2 மதிப்பெண் உடைய கேள்வி எண் 25 ல் ஆங்கில பிரிவில் ‘மாஸ் பங்ஷன்’ என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. அதேபோல் 5 மதிப்பெண் உடைய நேரிய சமன்பாடு தொகுப்பில் இடம்பெற்ற ‘நெகேஷன்’ குறியீடு, பாடப்புத்தகத்தில் இல்லை.” என கூறி உள்ளனர். இதனால் மாணவர்களின் 100க்கு 100 என்ற சென்டம்-க்கு சிக்கல் வர வாய்ப்புள்ளதால், பதில் எழுத முயற்சித்த மாணவர்களுக்கு 7 மார்க் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.