நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று (மார்ச் 22) அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், மகளிருக்கு உரிமை தொகை மாதம் ரூபாய். 3000 வழங்க மத்திய அரசே வலியுறுத்துவோம் என்று அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசை நிர்ணயம் செய்யவும் வலியுறுத்துவோம்.
CSK vs RCB 2024: அறிமுகமாகும் பிசிசிஐ யின் புதிய விதி…, வெளியான முக்கிய அப்டேட்!!
மேலும் நீட் தேர்வுக்கு மாற்றாக 12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என ஒன்றிய அரிசியை வலியுறுத்துவோம். 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தி தின கூலியாக ரூ.450 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.