முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. இதைத்தொடர்ந்து பொன்முடியை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் குற்றமற்றவர் என குறிப்பிடவில்லை எனக்கூறி பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்தார்.
தமிழக பிளஸ் 2 மாணவர்களே., கணித பாடத்தில் 7 மார்க்-க்கு தவறான வினா., ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கை!!!
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர். இதையடுத்து ஆளுநர், தனது பதவியை ராஜினாமா செய்ய ஆலோசித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.