இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17 வது சீசன் இன்று முதல் மே மாத இறுதிவரை அரங்கேற உள்ளது. இந்த நிலையில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் போட்டி இன்று (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இப்போட்டியில் இருந்து ஓர் புதிய விதி அறிமுகமாக இருக்கிறது.
அதாவது ஐபிஎல் தொடரில் இம்முறை பந்து வீச்சாளர்கள், 2 பவுன்சர்களை வீச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற சீசன்களில் ஒரு முறை மட்டுமே பவுன்சர் விச அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.