இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் இன்று பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இந்த முறை, சென்னை அணி மீது தான், ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த இரு அணிகளும், கடந்த சீசனில் ஒரு போட்டியில் மோதி உள்ளன. இதில் சென்னை அணியே வெற்றி பெற்றுள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், RCB தனது முதல் போட்டியிலேயே வெற்றி பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் கடந்த சீசனை வென்றது போல இந்த முறையும் முழு பலத்துடன், களமிறங்கி கோப்பையை வெல்லும் என முன்னாள் வீரர்கள் மற்றும் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.