நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக, லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறைகளை, மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அதன்படி உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதையடுத்து வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களில், அந்தந்த தொகுதிகளில் உள்ள பள்ளிகள் மட்டுமல்லாமல் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு அம்மாநில பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (22.03.2024) – முழு விவரம் உள்ளே!!