சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் ரோகிணி மறைத்து வைத்துள்ள உண்மை எப்போது வெட்ட வெளிச்சத்துக்கு வரும் என்பதுதான் கதையின் அடுத்த திருப்பமாக உள்ளது. இப்படி இருக்கையில் இப்போது வெளியாகிய ப்ரோமோவில் ரவி ஸ்ருதி இருவரும் வீட்டுக்கு வருகின்றனர். அவர்களை மீனா ரோகிணி இருவரும் ஆராத்தி எடுத்து உள்ளே வர சொல்கின்றனர். பின் விஜயா வீட்டில் விளக்கேற்ற சொல்கிறார். ஆனால் ஸ்ருதிக்கு தீப்பட்டியை எப்படி பொருத்துவது என்று தெரியவில்லை.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
உடனே அண்ணாமலை இது கூடவா தெரியலை என்று சத்தம் போடுகிறார். அடுத்ததாக விஜயா இருவருக்கும் பால்பழம் கொடுத்து ரவியை முதலில் சாப்பிட சொல்கிறார். உடனே ஸ்ருதி அவன் தான் ஃபர்ஸ்ட் சாப்பிடனுமா நான் சாப்பிட்டத தான் ரவி சாப்பிடணும் என்று சொல்லி விஜயாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கிறார். அடுத்ததாக ஸ்ருதியிடம் உங்களுக்கு இன்னைக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு ரெடி பண்ணி இருக்கோம் என்று சொல்ல அது முடிஞ்சிருச்சு என ஸ்ருதி சொல்கிறார். பின் ஒவ்வொரு விஷயத்திலும் ஸ்ருதியை விஜயா கவனிப்பதை பார்த்து ரோகிணி இனி நம்மள கண்டுக்க மாட்டாங்க என்று பொறாமை படுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.