கடந்த நவம்பர் 30 ஆம் தேதி மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மிசோரம் தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மிசோரம் தவிர மற்ற மாநிலங்களின் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் யார் வெற்றி பெற போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த 4 மாநிலங்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ்-பாஜக கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் யார் வெற்றி பெற போகிறார் என இன்று தெரிந்து விடும்.