சிறகடிக்க ஆசை சீரியல் இப்போது அடுத்தடுத்த பல சுவாரஸ்சியமான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. ரோகிணி தேவையில்லாமல் ஒரு ஆளை செட் பண்ணி அவரே இப்போது சிக்கலில் மாட்டி கொள்கிறார். மேலும் ரோகினியின் மாமா செய்யும் ஒவ்வொரு செயலையும் பார்த்து இவர் மலேசியா இல்லை என முத்து கண்டுபிடிக்கிறார். இதனால் அவர் வாயில் இருந்து உண்மையை வர வைக்க முத்து அவருக்கு சரக்கு பாட்டில் வாங்கி கொடுக்கிறார்.
Enewz Tamil WhatsApp Channel
குடிபோதையில் அவரும் வரம்புக்கு மீறி நடந்து கொள்கிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் அந்த ஆள் குடிபோதையில் எல்லாம் உண்மையையும் சொல்லி விடுவாராம். அதே வேளையில் ரோகினி அவரது அம்மாவுடன் பேசிக் கொண்டிருப்பதையும் முத்து பார்த்து விடுவாராம். இதை வைத்து முத்து ரோகினியை கையும் களவுமாக பிடித்து வீட்டில் உள்ளவர்களிடம் சொல்வாராம். அப்போதுதான் ரோகினி இத்தனை நாள் செய்த திருட்டுத்தனம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிய வருமாம்.
TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகுபவர்களே., இந்த பயிற்சியும் கட்டாயம்? யூஸ் பண்ணிக்கோங்க!!!