சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி செட் செய்துள்ள ஆள் இன்று வீட்டுக்கு வருகிறார். அவரை விஜயா தடபுடலாக வரவேற்கிறார். அவர்கள் முன்பு முத்து, அண்ணாமலை எல்லோரையும் விஜயா மட்டம் தட்டி பேசுகிறார். அப்போது வீட்டில் உள்ளவர்கள் ரோகிணியின் மாமாவிடம் கேள்வி கேட்க அவர் மாறி மாறி பேசுகிறார். இதனால் முத்துவுக்கு சந்தேகம் வருகிறது. ஆனால் ரோகிணி அனைத்தையும் சமாளித்து விடுகிறார்.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது முத்து அவரது நண்பர் செல்வம் இருவரும் குடித்துக் கொண்டிருப்பார்களாம். அதை பார்த்த ரோகிணியின் மாமாவும் இவர்களுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பித்து விடுவாராம். அப்போது முத்து போதையில் அவரிடம் பல கேள்விகளை கேட்பாராம். அதற்கு அவர் அனைத்து உண்மையையும் உளறி விடுவாராம். இதன் மூலம் ரோகிணி முத்துவிடம் வசமாக சிக்கித் தவிப்பாராம்.
அட்றா சக்க., விஜய்யின் G.O.A.T திரைப்படத்தில் இவர்தான் வில்லனா?? அப்போ தரமான சம்பவம் உறுதி!!