சிறகடிக்க ஆசை சீரியலில் இத்தனை நாள் மனோஜ் வேலை இல்லாமல் பார்க்கில் வெட்டியாக தான் இருந்துள்ளார் என்ற விஷயம் முத்துவுக்கு தெரிய வருகிறது. இதை உடனே முத்து ஆதாரத்துடன் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். இதைக் கேட்டு ரோகிணி எதுவும் பேச முடியாமல் கண் கலங்கி நிற்கிறார். அப்போது ஸ்ருதி ரோகிணியிடம் உங்க புருஷன் ஏன் இப்படி இருக்காங்க என அசிங்கமாக பேசுகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது மனோஜ் இத்தனை நாள் வேலை இல்லாமல் சும்மாதான் இருந்தார் என்ற விஷயம் விஜயாவுக்கு ஏற்கனவே தெரியும் என்பது ரோகிணிக்கு தெரிந்து விடுமாம். உடனே ரோகிணி விஜயாவிடம் நீங்களும் உண்மைய மறச்சிட்டிங்கள. இப்படி ஒரு பிள்ளைய பெத்து வளர்க்க அசிங்கமாவே இல்லையா என கேவலமாக பேசுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜயா மனோஜிடம் உன்னால எனக்கு எவ்வளவு அசிங்கம் பாரு என கேவலமாக பேசுவாராம்.