தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்க பணத்துடன், ஒரு கிலோ வெல்லம், பச்சரிசி, கரும்பு உள்ளிட்டவற்றை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டோக்கன்கள் இன்று ரேஷன் கடைகள் மூலம் வழங்க உள்ள நிலையில் பொருட்கள் அனைத்தும் ஜனவரி 10ம் தேதி முதல் 13ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை வாங்குவதற்கு அவர்களது கைரேகை கட்டாயம் தேவை என தெரிவித்துள்ளனர். ஒருவேளை கைரேகை பதிவாகவில்லை என்றால் அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.