இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 19 மொழிகளில் 10,000க்கும் மேற்பட்ட பின்னணி பாடல்களை பாடி அசத்திய வாணி ஜெயராம் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் பல்வேறு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து FIR பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் வாணி ஜெயராம் வீட்டின் சிசிடிவி-யை ஆய்வு செய்த போது வெளியாட்கள் வந்துபோன தடையும் எதுவும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இவரது உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது தலையில் ஏற்பட்ட காயத்தினால் மரணம் அடைந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
உஷார் மக்களே.., அடுத்த மூன்று நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை ஆய்வு மையம் தகவல்!!
மேலும் படுக்கை அருகில் உள்ள 2 அடி உயரமுள்ள பழமையான மேசை மீது விழுந்து தலையில் அடிபட்டுள்ளதாக ரத்த கரையை வைத்து தடயவியல் துறை நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதனால் வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என போலீசார் உறுதி செய்துள்ளனர்.