முப்படைகளின் ஆட்சேர்ப்பு தேர்வு வரிசை முறை மாற்றம்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு!!!

0

இந்தியாவில் உள்ள ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளில் ஆட்சேர்ப்பு எண்ணிக்கையை அதிகரிக்க கடந்த ஜூன் மாதம் அக்னிபத் திட்டத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இதன் மூலம் பணியமர்த்தப்படும் இளைஞர்கள் நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் பணிபுரிய முடியும் என்றும் தெரிவித்தார். இதனால் நாடு முழுவதும் இந்த திட்டத்துக்கு அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

ஆனால் கடந்த ஜூலை மாதம் முதல் இந்த திட்டத்தின் மூலம் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பங்கு பெறுபவர்களுக்கு உடல் தகுதி, மருத்துவ சோதனை, எழுத்துத் தேர்வு என வரிசை முறையில் தேர்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இவ்வாறு முதலிரண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று இறுதியில் எழுத்துத்தேர்வில் தோல்வி அடைந்து ஏராளமானோர் தகுதியற்றவர்களாக வெளியேற்றப்படுகிறார்கள்.

EPF பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு.., ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய சலுகை!!

இதனால் தேர்வர்கள் தேர்வு முறையை மாற்ற வலியுறுத்தி வந்தனர். இதன் காரணமாக அக்னிபத் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளவர்கள் முதலில் ஆன்லைன் மூலம் நுழைவுத்தேர்வு முடித்து தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அடுத்ததாக உடல் தகுதி, மருத்துவ சோதனை என்ற வரிசை முறையில் தேர்வுகள் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் முகாம்களில் ஏராளமானோர் பங்குபெறுவது தடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here