சமீபகாலமாக வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் கனமழை பெய்திருந்தது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா பகுதிகளில் வலு விழந்து வருகிறது. இதனால் மழை பதிவு குறைந்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 5) முதல் பிப்ரவரி 7ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் பிப்ரவரி 8ம் தேதி ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
புற்றுநோயாளிகளுக்கான நவீன சிகிச்சை முறை.., முதல் முதலாக மதுரை அரசு மருத்துவமனையில் அறிமுகம்!!!
இதனால் சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வானம் சற்று மேகமூட்டத்துடனும், மற்ற மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 31-32 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.