பாடகர் எஸ்.பி.பி சீக்கிரமாக நலம் அடைவார் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
கடந்த 14 ஆம் தேதி பாடகர் எஸ்.பி.பி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை கடந்த சில நாட்களாக சில நேரங்களில் முன்னேற்றமாகவும், சில நேரங்களில் மோசமாகவும் இருந்து வந்தது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இதனால் அவரது ரசிகர்கள் பெரிதும் கவலையில் ஆழ்ந்தனர். அவரது உடல் நிலை அவ்வப்போது மாற்றங்களுடன் இருந்து வந்ததால் , மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளனர்.
தொடர் சிகிச்சை:
கடந்த சில நாட்களாக அவருக்கு செயற்கையாக “ஆக்ஸிஜன்” வழங்க படுகிறது. இதன் மூலமாக அவரது உடலில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அவரது உடல் தீவிர சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைக்கிறது. அதனால் , தற்போது மேற்கொள்ளும் சிகிச்சை முறையை தொடர திட்டமிட்டுள்ளோம்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!
அவருக்காக பலரும் பிராத்தனை செய்து வருகின்றனர், அதன் பலனாக அவர் குணம் அடைவார் என்று எதிர்பார்க்கிறோம் என்று மருத்துவர்கள் குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.