கொரோனா பாதிப்பை கண்டறிய ராபிட் டெஸ்ட் கிட் வரவழைக்க பட்டிருந்தது. ராஜஸ்தானில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டியதால் பரிசோதனை செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பரிசோதனைகளை நிறுத்திவிட்டு, புதிய திட்டத்தை வகுக்க இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ராபிட் டெஸ்ட் கிட்
ராஜஸ்தானில் 1,600-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 25 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் 30 நிமிடங்களுக்குள் கொரோனா பரிசோதனை முடிவை அறிந்துகொள்ளக்கூடிய வகையில் வசதியை கொண்ட ரேபிட் டெஸ்ட் கிட்கள் 10 ஆயிரம் ரேபிட் கிட்டுகள் வரவழைக்கப்பட்டன. சீனாவிடம் இருந்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் கொள்முதல் செய்துள்ளன.
இந்நிலையில் ராஜஸ்தானில் ரேபிட் கருவிகள் தவறான முடிவை தந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 95 சதவீத முடிவுகளில் முரண்பாடுகள் உள்ளதாகவும், ஆன்டிபாடி பரிசோதனைகளை நிறுத்திவிட்டு, ஆர்டி – பிசிஆர் பரிசோதனைகளை தொடர உள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரகு ஷர்மா கூறியுள்ளார். இதையடுத்து மாநில அரசு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து ராஜஸ்தானில் ரேபிட் கருவி மூலம் கொரோனா பரிசோதனை நடத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |