‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். மார்டன் உடையில் ரோஷினி எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ரோஷினி ஹரிப்ரியன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ தொடரின் ஹீரோயினாக நடித்து வருபவர் அறிமுக நடிகை ரோஷினி ஹரிப்ரியன். மாடலாக பணியாற்றி வந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் திரைத்தொடரின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்துள்ளார். தொடரில் இவர் ஏற்று நடித்து வரும் அதிரடியான கதாப்பாத்திரம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
குறிப்பாக வயிற்றில் குழந்தையோடு கணவனின் வீட்டை விட்டு வெளியேறும் இவரது காட்சிகள் எல்லாம் மீம்ஸ் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமானது. சீரியலுக்கு முன்னாக இவர் செய்து வந்த மாடலிங் துறையில் இவர் செய்துள்ள மாடல்கள் எல்லாம் சமூகத்துக்கு தேவையான கருத்துக்கள் பல அடங்கியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக சீரியல் நாயகிகளுக்கு, புடவை உடுத்திக்கொண்டு, எப்போதும் அழுகும் காட்சிகள் தான் அதிகமாக இருக்கும். சீரியலைத்தவிர வெளிநிகழ்ச்சிகளில் நடிகைகள் பங்குகொள்ளும் போது தான் சீரியல் நடிகைகளை அழகானவர்களாக பார்க்க முடியும்.
தற்போது பிரபலமாகி வரும் போட்டோ ஷூட் கலாச்சாரத்தின் மூலம் சினிமா நடிகைகள் தங்களை அழகாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு, அதை சமூகவலைதளத்தில் பதிவிடும் பழக்கத்திற்கு மாறியுள்ளார்கள். திரையில் ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கும் நடிகைகள் கூட போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக சினிமா வாய்ப்புகளுக்காக நடிகர், நடிகைகள் அதிகமானோர் போட்டோ ஷூட் எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ரோஷினி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.