தஞ்சாவூர் அருகே பெரியார் சிலைக்கு காவி துண்டு மற்றும் தொப்பி அணிவிக்கப்பட்டது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை செய்த மர்ம நபர்களை தேடும் பணியில் தற்போது போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பெரியார் சிலை:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அருகில் பெரியார் சிலை ஒன்று உள்ளது. சுமார் 6 அடி உயரத்தில் இருக்கும் இந்த சிலைக்கு நேற்றிரவு யாரோ மர்ம நபர்கள் காவித்துண்டு மற்றும் தொப்பியினை அணிவித்துள்ளனர். இன்று அதிகாலையில் அதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து போலீசார் ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர்.
பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!
அப்பகுதியிலுள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களின் சிசிடிவி பதிவுகளை ஆராயும் வேலை துவங்கியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இதனை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனினும் போலீசார் தங்களது விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யாரோ மர்ம நபர்கள் இவ்வாறு செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அப்பகுதியில் சப் – இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் சுமார் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளிலும் இது போல ஏற்கனவே பலமுறை பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்யப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்டவர்களை கண்டு பிடித்து கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.