அமீத் ஷா மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்வேன் – புதுவை முன்னாள் முதல்வர் நாராயண சாமி பேட்டி!!

0
amith shah tweet
amith shah tweet

நேற்று புதுவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமீத் ஷா, புதுவையின் முன்னாள் முதல்வர் நாராயண சாமி மீது ஊழல் குற்றசாட்டினை தெரிவித்திருந்தார். இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள நாராயண சாமி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

அமீத் ஷா குற்றசாட்டு:

புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற பொதுக்குழு ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷா “புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கிய 15,000 கோடி ரூபாயை நாராயண சாமி புதுச்சேரியின் நலத்துக்கு செலவிடவில்லை என்றும் அவர் அவ்வளவு பணத்தையும் இந்திராகாந்தியின் குடும்பத்திற்கே அனுப்பும் வேலையை தான் இவவளவு நாளும் செய்துள்ளார்” என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் முன்னாள் முதல்வர் நாராயண சாமி இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சின்னத்திரை நடிகைகள் டாப் 5 லிஸ்ட் – முதலிடத்தை பிடித்த பாரதி கண்ணம்மா ரோஷினி!!

இது குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “அமீத் ஷா என் மீது மிக கடுமையான குற்றசாட்டை கூறியுள்ளார். அதனை அவர் நிரூபிக்க முடியுமா?? என நான் அவருக்கு சவால் விடுகிறேன். ஒருவேளை அவரால் இந்த குற்றசாட்டை நிரூபிக்க முடியாமல் போனால் புதுச்சேரி மக்களிடமும், இந்திய தேசத்திடமும் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். என்னையும் என் குடும்பத்தையும் களங்கப்படுத்தும் விதமான இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக நான் அவதூறு வழக்கு தாக்கல் செய்வேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here