நடிகை மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்து கொண்டது பணத்துக்காக தான் என பலரும் குற்றம் சாட்டி வந்த நிலையில், இது குறித்த நெத்தியடி பதில் ஒன்றை தற்போது மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
மகாலட்சுமி பதில்:
சீரியல் நடிகை மகாலட்சுமி, பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை 2 தாக திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதாலும், ஜோடி பொருத்தம் இல்லை என்பதாலும் பலரும் இவர்களை மோசமாக விமர்சித்து வந்தனர். அதிலும் பணத்துக்காக மகாலட்சுமி இவரை திருமணம் செய்து கொண்டார் என குற்றம் சாட்டினர். இது குறித்து அண்மையில் பேசிய மகாலட்சுமி, என் அப்பா சினிமாவில் மிகப்பெரிய ஆள்.
பாகுபலி, பொன்னியின் செல்வன் போன்ற பெரிய படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய சங்கர் ஐயா பற்றி பலருக்கும் தெரியும். அதுமட்டுமில்லாமல், படம் மற்றும் சீரியலில் என்னுடைய சம்பளம் ரூ.3 லட்சம். இப்படி இருக்கும் போது, பணத்திற்காக ரவீந்தரை திருமணம் செய்ய வேண்டும் என்ற தேவை எனக்கு இல்லை என நெத்தியடி பதில் கொடுத்துள்ளார். நடிகையின் இந்த பதிவு தற்போது, இணையத்தில் வைரலாகி வருகிறது.