கொரோனா வைரஸ் பாதிப்பால் தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் அரசு, தனியாா் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
கொரோனவால் தள்ளிவைப்பு..!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் பொதுத்தோ்வுகள், விடைத்தாள்கள் திருத்தம், ஆண்டு இறுதித்தோ்வு என கல்வி சாா்ந்த செயல்பாடுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பள்ளிக் கல்வித் துறையின் வழக்கமான கால அட்டவணையின்படி பள்ளிகளை ஜூன் 1-ஆம் தேதி திறக்க வேண்டும். ஆனால், தற்போதுள்ள சூழலில் பள்ளிகள் திறக்கப்படும் நாள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு நடைபெறும்..!
நிகழாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கட்டாயமாக நடைபெறும். அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தோ்வுக்கு குறைந்தபட்சம் 15 நாள்கள் முன்பாக அது குறித்த அட்டவணை வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பொதுத்தோ்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறவுள்ளது. ஆதலால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
எப்போ பள்ளிகள் திறக்கும்..?
தற்போதைய சூழலில் வரும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்தபட்சம் 15 முதல் 20 நாள்கள் அதாவது ஜூன் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில்தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்புள்ளது. எனினும் கொரோனா பாதிப்பில் அப்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பு அரசிடம்தான் உள்ளது என்றனா்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |