கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு எப்போது நடைபெறும்..? உயர்கல்வித்துறை அறிவிப்பு..!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி அவர்கள் மே 3 வரை நாடுதழுவிய ஊரடங்கை நீட்டித்தார். இந்நிலையில் தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுவது குறித்து உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

எப்போது தேர்வுகள்..?

  • தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இந்தாண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • கல்லூரிகளில் கோடை விடுமுறை முடிந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கும் பொழுது இந்த செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஜூன் மாதம் தான் கல்லூரிகள் திறக்கப்படும் எனவும், இந்தாண்டுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை எனவும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • அடுத்த கல்வியாண்டு கல்லூரி திறந்த பிறகு தேர்வுகள் நடைபெற்ற பிறகு தான் அந்த ஆண்டிற்கான பாடங்கள் நடத்தப்படும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here