திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தோழமை கட்சித் தலைவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதில் தமிழகத்தில் கொரோனா தாக்கம் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
முக ஸ்டாலின் அறிவிப்புகள்:
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும். கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கிட வேண்டும். விவசாயப் பொருட்களுக்கான கொள்முதலை தாமதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் போலீசார் அனுமதி கிடைக்காததால் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருந்த கூட்டம் தற்போது காணொளி வாயிலாக நடைபெற்று உள்ளது. நிவாரண உதவிகள் வழங்குவதற்கு உயர்நீதி மன்றம் வழங்கிய உத்தரவுகளை தமிழக அரசு கட்டாயமாக செய்லபடுத்த வேண்டும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |