ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மீண்டுமாக பள்ளிகளை திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தனியார் பள்ளிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் கோரிக்கை:
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது மீண்டுமாக துவங்கியுள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 8ம் தேதி 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் துவங்கியது. இந்நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்புகள் வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தனியார் பள்ளி கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழ்நாடு தனியார் பள்ளியின் ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தனியார் பள்ளியின் மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் தலைமையில் 100கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் இளங்கோவன், கொரோனா காரணமாக 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியம் பகுதிநேர ஊதியமாக வழங்கப்பட்டது.
விரைவில் ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் – போனிகபூர் அறிவுப்பு!!
ஆனால் தனியார் பள்ளிகள் ஒற்றுமையின்றி பள்ளிக்கட்டணத்தை அதிகமாகவும், குறைவாகவும் வாங்கி வந்ததாக கூறினார். மேலும் இது போல சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க சங்கம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்புகள் வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.