பிரபல இயக்குனருடன் 4வது முறையாக இணையும் ஜிவி பிரகாஷ் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது நடித்து முடித்துள்ள படம் ஜெயில். இப்படத்தின் இயக்குனர் வசந்த பாலனின் அடுத்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இதன் மூலம் 4வது முறையாக இருவரும் இணைகின்றனர்.

புதிய படம்:

பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் தற்போது ஜெயில் படத்திற்கு இசையமைத்து ஹீரோவாக நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்திற்கு அடுத்தபடியாக அப்படத்தின் இயக்குனர் வசந்த பாலனின் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். முன்னதாக அவர் வெயில், அங்காடித்தெரு, அரவான் , காவியத்தலைவன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் வெயில் படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

விரைவில் ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் – போனிகபூர் அறிவுப்பு!!

தொடர்ந்து அங்காடி தெரு, அரவான், ஜெயில் ஆகிய படங்களில் வசந்த பாலனுடன் இணைத்து பணியாற்றிய அவர் மீண்டும் 4வது முறையாக வசந்த பாலனுடன் இணையவுள்ளார். வசந்தபாலன் தனது பள்ளிப்பருவ நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பை கடந்தவாரம் வெளியிட்டார். அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா இனைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்கவுள்ளார் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இது 4ம் முறை வசந்த பாலன்-ஜிவி பிரகாஷ் கூட்டணியில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here