கனமழை எச்சரிக்கை – காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

0

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காரைக்காலில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

பள்ளிகளுக்கு விடுமுறை

இலங்கை மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதியை ஒட்டி காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் தமிழகத்தில் கனமழைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம். இதை தொடர்ந்து காரைக்கால் மாவட்டத்தில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அடுத்த 24 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

#INDvsAUS 4 வது டெஸ்ட் – விஹாரி மற்றும் பும்ராஹ் விலகல்!!

ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை அல்லது கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, மதுரை, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here