பள்ளிக்கு செல்ல சொல்லி பெற்றோர்கள் கண்டித்ததால் மாணவன் தற்கொலை – விருதுநகரில் நடந்த துயரம்!!

0

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் தனது மகனை பள்ளிக்கு செல்ல கூறி பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் அந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ராஜபாளையம்:

தற்போதைய காலத்தில் இளைஞர்கள் அனைவரும் சிறிய காரணத்திற்காக தற்கொலை செய்து வருகின்றனர். மேலும் இன்றைய காலத்தில் தற்கொலையின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இதுபோல் ஓர் சம்பவம் தான் விருதுநகர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அருகே உள்ள மங்காபுரத்தை சேர்ந்தவர் குருவையா. இவருக்கு இரண்டு மகன்கள். இவரது இரண்டாவது மகன் தான் பரமகுரு. பரமகுரு அந்த பகுதியில் உள்ள ரயில்வே பீட்டர் சாலையில் உள்ள அரசு உதவி பெரும் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த கொரோனா காலத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்ட காரணத்தினால் பரமகுரு தனது நண்பர்களுடன் நன்கு ஊரை சுற்றியுள்ளார். மேலும் அவர்களுடன் தான் அதிக நேரத்தையும் செலவளித்துள்ளான். தற்போது அனைத்து பள்ளிகளும் திறந்து வருகிறது. இதேபோல் பரமகுரு படிக்கும் பள்ளியும் திறக்கப்பட்டது. ஆனால் ஊர் சுற்றி பழகியதால் பரமகுரு தற்போது பள்ளிக்கு செல்வதற்கு அவருக்கு மனம் வரவில்லை. எனவே பள்ளிக்கு செல்லாமல் இருந்தார். இதனால் இவனது பெற்றோர் இவனை கண்டித்துள்ளனர்.

பிரபல இசையமைப்பாளருடன் காதலில் விழுந்த கீர்த்தி சுரேஷ்?? வைரலாகும் புகைப்படம்!!

இதனால் மனம் நொந்த பரமகுரு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளான். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மாணவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தற்போது போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here