இந்தியா முழுவதும் சமீப காலமாக பெரும்பாலான மாநிலங்களில் மிதமான மழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் பெரோஸ்பூர் மற்றும் ஸ்ரீ அனந்த்பூர் சாஹிப் ஆகிய மாவட்டங்களில் கனமழையால் ஒரு சில பகுதிகளின் சாலைகள் தண்ணீர் நிரம்பியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த சாலைகள் வழியே செல்லக்கூடிய பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல இருப்பதால், பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில பள்ளிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 19) முதல் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்ரீ அனந்த்பூர் சாஹிப்-ன் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு, ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு சென்ற இந்திய மாணவர்களுக்கு எழுந்த சிக்கல்., மீண்டும் திரும்பிய அவலம்!!!