அதிமுக கொடியுடன் சசிகலாவிற்கு வரவேற்பு – ஆதரவாளர்கள் ஆரவாரம்!!

1

தற்போது தமிழகத்தை நோக்கி சசிகலா வந்துகொண்டிருக்கிறார். வரும் வழியில் ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கொடியில் சின்னமா வருக வருக என்ற வாசகத்தை பதித்து ஆதரவாளர்கள் சசிகலாவை வரவேற்கின்றனர்.

சசிகலா:

சிறை தண்டனை மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு பின்பாக பெங்களூரு இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்த சசிகலா இன்று தமிழகத்திற்கு வருகிறார். பெங்களூரு இல்லத்தில் இருந்து கிளம்புவதற்கு முன்பாக இல்லத்தில் இருந்த ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர்களை தூவி தனது மரியாதையை செலுத்தினார் சசிகலா. மேலும் அவருடன் தினகரனும் மலர்களை தூவி ஜெயலலிதாவிற்கு மரியாதையை செலுத்தியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்பிறகு பெங்களுருவில் இருந்து கிளம்பிய சசிகலா அதிமுக கொடி பறக்கவிடப்பட்ட காரில் வந்தார். ஏற்கனவே அதிமுக கொடி பதித்த காரில் வந்ததால், அதிமுக அமைச்சர்கள் போலீசில் புகார் அளித்திருந்தனர், தற்போது மீண்டும் சசிகலா இந்த செயலை செய்ததால் அதிமுகவினர் ஆத்திரமடைந்தனர். மேலும் தமிழக எல்லைக்குள் வந்த பிறகு சசிகலாவின் காரில் இருந்து அதிமுக கொடியை அகற்றாவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறையினர் எச்சரித்தனர்.

#INDvsENG டெஸ்ட் தொடர் – அஸ்வின் சுழலில் சிக்கிய இங்கிலாந்து அணி!! 178 ரன்னுக்கு ஆல் அவுட்!!

ஆனால் சசிகலா தொடர்ந்து அதிமுகவினர் காரில் மாறி மாறி வருகிறார். அவர் மாறும் அனைத்து காரிலும் அதிமுக கொடி உள்ளது. மேலும் வரும் வழிகளில் அவருக்கு ஆதரவாளர்கள் பெரும் உற்சாகமான வரவேற்பை அளித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் கொடியில் சின்னம்மா வருக வருக என்ற வாசகத்தை பதித்து அந்த கொடியை அசைத்து சசிகலாவிற்கு வரவேற்பு அளித்து வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

1 COMMENT

  1. She is culprit and indirectly supporting Stalin,neighter she will come to power nor allow AIADMK to come to power, otherwise function function as B team of DMK

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here