பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளார். மேலும் விரைவில் வீடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சசிகலா டிஸ்சார்ஜ்
கடந்த 20 ம் தேதியிலிருந்து கொரோனா தொற்றின் காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா தற்போது தொற்றின் தாக்கத்திலிருந்து குணமடைந்துள்ளார். மேலும் அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை ஆகிய நோய்களின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதற்கு தேவையான சிகிச்சைகளை பெற்ற அவர் தற்போது பூரண குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இன்சுலின் ஊசி எடுத்துக்கொள்ளாமலேயே அவருக்கு ரத்தத்தின் அளவு சீராக உள்ளது. மேலும் மூச்சுத்திணறல் ஏதும் இல்லாமல் இயற்கையாகவே சுவாசித்து வருகிறார். யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாக நடக்கிறார். தற்போது கொரோனா இறுதிக்கட்ட பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறார். பரிசோதனை முடிவுகள் வெளி வந்ததும் சீக்கிரமாக வீடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அறிவித்தது போல பிப்ரவரி முதல் வாரத்தில் அவர் தமிழகம் திரும்புவார் என சசிகலாவின் நட்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.