பிப்ரவரி 7 இல் தமிழகத்திற்கு வருகை தரும் சசிகலா – டிடிவி தினகரன் அறிவிப்பு!!

0

தற்போது பெங்களூரு இல்லத்தில் சசிகலா ஓய்வு எடுத்து வருகிறார். அவர் வரும் 7ம் தேதி அன்று தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். இதனை தினகரன் அறிவித்துள்ளார்.

சசிகலா:

சொத்துகுவிப்பு வழக்கிற்காக கடந்த 2017ம் ஆண்டில் பெங்களூரில் உள்ள அக்ரஹாரா பகுதி சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. 4 ஆண்டு தண்டனைக்கு பின்பு அவரது தண்டனை காலம் கடந்த 27ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த 20ம் தேதி அன்று சசிகலாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் அவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது. இதனால் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். மேலும் கடந்த 27ம் தேதி அன்று சசிகலா விடுதலை பெற்றார். விடுதலைக்கு பின்பும் சிகிச்சை மேற்கொண்டு வந்தார் சசிகலா. மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக சசிகலாவின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால் சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். பெங்களுருவில் உள்ள இல்லத்தில் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.

ஏற்றத்துடன் துவங்கியுள்ள பங்குச்சந்தை நிலவரம் – முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!!

தற்போது தமிழகத்திற்கு சசிகலா வருகை குறித்து ஓர் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் ஓர் திருமண விழாவில் தினகரன் கலந்துகொண்டார். விழாவிற்கு பின்பு பேட்டியளித்த தினகரன், தமிழகத்தில் சசிகலா தலைமையில் ஆட்சியமைப்போம் என்று தெரிவித்தார். மேலும் அதிமுகவை மீட்டெடுக்க சசிகலா சட்டப்போராட்டம் நடத்த உள்ளதாகவும், தீய சக்திகளிடம் இருந்து அதிமுகவை மீட்டேடுக்க தான் அமமுக துவங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் தமிழகத்திற்கு சசிகலா வரும் 7ம் தேதி அன்று வருகை தரவுள்ளார் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here